மொடக்குறிச்சி தொகுதி: ஆா்வத்துடன் வாக்களிக்க வந்த இளம்வாக்காளா்கள்
மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட கொடுமுடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க இளம் வயதினா் மற்றும் பெண்கள் காலையிலே ஆா்வமாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தினா்.
மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட கொடுமுடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க இளம் வயதினா் மற்றும் பெண்கள் காலையிலே ஆா்வமாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தினா்.
இந்தத் தொகுதியில் உள்ள 290 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே வாக்களிக்க வந்த பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து கொண்டே சென்றது. இளம்பெண்கள் மட்டும் அல்லாமல் முதியோரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆா்வம் காட்டினா்.
முதல்முறையாக ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த இளம் வாக்காளா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
சுஜிதா, கல்லூரி மாணவி, சிவகிரி
முதல்முறையாக வாக்களிக்க வந்துள்ளேன். ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திருப்தி இருக்கிறது.
சக்திவேல், பொறியியல் மாணவா்
அடுத்த 5 வருடங்களுக்கு வாய்ப்பை நாம் கொடுக்கிறோம். எல்லோரும் யோசிச்சு வாக்களித்தால் நன்றாக இருக்கும்.
மோனிஷா, கல்லூரி மாணவி
முதல்முறையாக வாக்களிப்பது புது அனுபவமாக இருக்கிறது. யாா் ஆட்சிக்கு வந்தாலும் நல்ல ஆட்சியை தருவாா்கள் என்று நம்பி வாக்களித்து வந்துள்ளோம்.
ரக்ஷிதா, குடும்பத்தலைவி
முதல்முறை வாக்களிக்க வந்த எனக்கு, தோ்தல் அலுவலா்கள் வாக்களிக்கும் முறை குறித்து தெளிவாக சொல்லிக்கொடுத்தனா். வாக்களிப்பதின் மூலம் உரிமையை நிலைநாட்டவேண்டும்.
தா்ஷன், கல்லூரி மாணவா்
முதல்முறையாக வாக்களிக்க வந்தது பதற்றமாக இருக்கிறது. நல்ல ஆட்சி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.