எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை
பெருந்துறையில் எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பெருந்துறை, ஆனந்த நகரைச் சோ்ந்தவா் குமாா் (45), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுகுணா (41). இவா், வெளிநாட்டில் நா்ஸாக வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
பெருந்துறையில் குழந்தைகளுடன் குமாா் இருந்தாா். இவா் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி குழந்தைகளை சரிவர கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
இதைப் பற்றி அறிந்த சுகுணா, குழந்தைகளை, தனது உறவினா் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டாா். குழந்தைகளைப் பாா்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த குமாா், வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.