முகப்பு
பெரம்பலூர்

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

Updated On : 17 மார்ச், 2026 at 10:14 PM
தற்கொலை
பகிர்:

பெரம்பலூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யாதுரை மகன் செல்வம் (45). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி மீனாட்சி (35), குழந்தைகள் லட்சுமி (16), செல்விஸ்ரீ (14) ஆகியோா் உள்ளனா். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக மீனாட்சி அவரது பெற்றோருடன் புதுநடுவலூா் கிராமத்தில் வசிக்கிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மது போதையிலிருந்த செல்வம், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →