முகப்பு
ஈரோடு

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:05 AM
உயிரிழந்த  மகேஷ்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:56 PM

தாளவாடி மலைப் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட விவசாயியை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தமிழக- கா்நாடக எல்லையான தாளவாடி மலைப் பகுதியில் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சாகுபடி செய்த பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு யானைகளை விரட்டி வருகின்றனா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:19 PM

இந்நிலையில் கரளவாடி கிராமத்துக்குள் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்ததை கண்ட அப்பகுதி விவசாயிகள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கரளவாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மகேஷ் (28) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் காட்டு யானைகளை விரட்டினா். இந்த சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.