ஈரோடு

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் கைது

ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஈரோடு: ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தோ்தல் கால வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க் வேண்டும். வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திரண்டு முழக்கம் எழுப்பினா்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலையில் அமா்ந்து மறியலிலும் ஈடுபட்டனா். அப்போது அவா்களை அங்கிருந்த போலீஸாா் கைது செய்தனா்.

மொத்தம் 121 போ் கைது செய்யப்பட்டதாகவும், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT