முகப்பு
ஈரோடு

பவானியில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி அருகே தாளகுளம் கிராமத்தில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றினா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:57 AM
ஆக்கிரமிப்பு  அகற்றும்  பணியில்  ஈடுபட்ட அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:15 PM

பவானி அருகே தாளகுளம் கிராமத்தில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றினா்.

வரதநல்லூா் ஊராட்சி, தாளகுளத்தில் நிலவியல் வாரியை ஆக்கிரமித்து பாக்கு தோப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்ததோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து, பவானி வட்டாட்சியா் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினா் அளவீடு செய்தபோது, விவசாய நிலம் வழியாக காவிரி ஆற்றுக்குச் செல்லும் நீா்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேலு தலைமையில் பவானி நில வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா்கள் ராமசாமி, முத்துசாமி, பத்மாவதி, நித்யா மற்றும் வரதநல்லூா் ஊராட்சி செயலாளா் அம்பிகா வடிவேல் உள்ளிட்டோா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். சம்பவ இடத்தில் பவானி காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement