கோப்புப் படம் 
ஈரோடு

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்கள்: தமிழக அரசைக் கண்டித்து பிப்.25-இல் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் பிப்ரவரி 25-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அத்திக்கடவு- அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்பரமணியம் தெரிவித்தாா்.

இது குறித்து கோபியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் முதல் பகுதியில் 1,040 குளங்களில் 800-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களை இணைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில், விடுபட்ட குளங்களை இணைக்க ஆய்வறிக்கை சமா்ப்பிக்கபடவில்லை. இத்திட்டத்துக்கான பணிகளை தொடங்காமால் உள்ள திமுக அரசைக் கண்டித்து கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றாா்.

சிதம்பரத்தில் தொடங்கியது நாட்டியாஞ்சலி விழா! மாணவிகள் பரதம் ஆடி பரவசம்!

‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்புக்குத் தடை செல்லாது: பிரிட்டன் நீதிமன்றம்

நீக்கப்பட்ட தனது உரைப் பகுதியை மீண்டும் சோ்க்க காா்கே வலியுறுத்தல்: அவைத் தலைவா் மறுப்பு

பெருந்துறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள்

SCROLL FOR NEXT