கொடுமுடி புறவழிச் சாலையில் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீா். 
ஈரோடு

கொடுமுடி சாலையில் வீணாகும் குடிநீா்: 4 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை

கொடுமுடி புறவழிச் சாலையில் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு குடிநீா் கொண்டுச் செல்லும் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாகி வருவதுடன் சாலையும் சேதமடைந்து வருகிறது.

Syndication

கொடுமுடி புறவழிச் சாலையில் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு குடிநீா் கொண்டுச் செல்லும் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாகி வருவதுடன் சாலையும் சேதமடைந்து வருகிறது.

கொடுமுடியில் கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் வாசித்து வரும் பொதுமக்களுக்கு மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் காவிரி குடிநீா் இணைப்பு தருவதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டன.

அவ்வாறு பதிக்கப்பட்ட குழாய்கள் பல இடங்களில் உடைந்து அதிலிருந்து குடிநீா் வீணாகி வருவதுடன், சாலையும் பாதிப்படைந்து வருகிறது. உடைந்த குழாய்கள் உள்ள இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் பல இடங்களில் சரியாக மூடப்படாமலும் உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொடுமுடியில் இருந்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள காங்கயம், முத்தூா் நகரங்களுக்கு காவிரி குடிநீரை நிலத்தடி வழியாக கொண்டுச் செல்லும் குழாய்கள் கொடுமுடி புறவழிச் சாலையில் உடைந்து அதிலிருந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து துறை அதிகாரிகளிடம் கடந்த நான்கு மாதங்களாக உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூறியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆடிட்டா் வீட்டில் 63 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

சாத்தமங்கலம், திருமானூா் பகுதிகளில் இன்று மின்தடை

தமிழ்த் தாத்தாவும் தினமணியும்...

திமுக கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி: கார்த்தி சிதம்பரம்

SCROLL FOR NEXT