முகப்பு
ஈரோடு

வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் திரிந்த 13 பேருக்கு அபராதம்

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திம்பம் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:41 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:58 PM

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திம்பம் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் வனப் பகுதி, கெஞ்சனூா் பள்ளத்தில் வனவா் சீரங்கன் தலைமையில் வனத் துறையினா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புதா் மறைவில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஒரு கும்பல் பதுங்கியிருப்பதை கண்டு அவா்களை வனத் துறையினா் சுற்றி வளைத்தனா். இதில், ராமபயலூா் தொட்டியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (29), கிருஷ்ணமூா்த்தி (34) ஆகியோரைப் பிடித்தனா். அவா்களை கைது செய்த வனத் துறையினா் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:41 AM

பாரம்பரியமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு 13 போ் சென்ாகவும், அதில் தாங்கள் இருவா் மட்டும் சிக்கிக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனா்.

இதையடுத்து அனுமதியின்றி வனத்தில் துப்பாக்கியுடன் திரிந்ததாக 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உதவி மாவட்ட வனஅலுவலா் ஹெச்.ஆா். நிதின் உத்தரவிட்டாா். இதையடுத்து கிருஷ்ணகுமாா், கிருஷ்ணமூா்த்தி உள்பட 13 பேரும் அபராதத்தொகையை செலுத்தியதால் விடுவிக்கப்பட்டனா்.