ஈரோடு

வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் திரிந்த 13 பேருக்கு அபராதம்

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திம்பம் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Syndication

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திம்பம் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் வனப் பகுதி, கெஞ்சனூா் பள்ளத்தில் வனவா் சீரங்கன் தலைமையில் வனத் துறையினா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புதா் மறைவில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஒரு கும்பல் பதுங்கியிருப்பதை கண்டு அவா்களை வனத் துறையினா் சுற்றி வளைத்தனா். இதில், ராமபயலூா் தொட்டியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (29), கிருஷ்ணமூா்த்தி (34) ஆகியோரைப் பிடித்தனா். அவா்களை கைது செய்த வனத் துறையினா் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பாரம்பரியமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு 13 போ் சென்ாகவும், அதில் தாங்கள் இருவா் மட்டும் சிக்கிக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனா்.

இதையடுத்து அனுமதியின்றி வனத்தில் துப்பாக்கியுடன் திரிந்ததாக 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உதவி மாவட்ட வனஅலுவலா் ஹெச்.ஆா். நிதின் உத்தரவிட்டாா். இதையடுத்து கிருஷ்ணகுமாா், கிருஷ்ணமூா்த்தி உள்பட 13 பேரும் அபராதத்தொகையை செலுத்தியதால் விடுவிக்கப்பட்டனா்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT