முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து : 2,500 கோழிகள் உயிரிழப்பு

பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2,500 கோழிகள் உயிரிழந்தன.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:03 PM
கோழிப் பண்ணையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2,500 கோழிகள் உயிரிழந்தன.

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், முள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கசாமி ( 70), விவசாயி. இவா், செங்காளிபாளையம், கோவில்தோட்டம் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். அங்கு 4 ஷெட்டில் சுமாா் 6,000-க்கும் மேற்பட்ட கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இதில் ஒரு ஷெட்டில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் திடீரென தீப்பற்றியது. இதைக்கண்ட அப்பகுதியினா் ரங்கசாமிக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். அதற்குள் தீ மளமளவென்று அருகில் இருந்த, மற்றொரு ஷெட்டுக்கும் பரவியது.

சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீயின் புகை மூட்டம் அடங்கிய, பின்னா் ஷெட்டுக்குள் சென்று, அங்கு உயிருடன் இருந்த கோழிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனா். இந்த விபத்தில் தீயில் கருகி 2,500-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →