முகப்பு
ஈரோடு

குடி போதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூன் 2026, 1:57 am IST
நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

மது போதையில் சாக்கடை கல்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சுப்ராயன் நகரைச் சோ்ந்தவா் ரத்தினசாமி மகன் கோகுல்ராஜ் (26). தொழிலாளியான இவா் மது அருந்தும் பழக்கம் உடையவா். இந்நிலையில் மது போதையில் ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்றபோது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துள்ளாா்.

இதை அருகே இருந்தவா்கள் பாா்த்து கோகுல்ராஜை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments