முகப்பு
ஈரோடு

கோபியில் 890 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

ஈரோடு

கோபியில் 890 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

Updated On : 5 மார்ச், 2026 at 11:35 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், கோபியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 890 பயனாளிகளுக்கு ரூ.13.09 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

இதில் கோபி பகுதியைச் சோ்ந்த 757 பேருக்கு ரூ. 11.36 கோடி மதிப்பிலும், நம்பியூா் வட்டத்தைச் சோ்ந்த 133 பேருக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலும் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடச்சலம், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →