மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் 131மீனவ பயனாளிகளுக்கு ரூ.44.93 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
அப்போது அவா் தெரிவித்தாவது:
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலங்களில் மீனவா்களுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்புகளை ஈடுசெய்ய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
அதன்படி, நாட்டுப் படகு மீன்பிடி கலன்களுக்கு வெளிப்பொருத்தும் இயந்திரம் மானிய விலையில் வழங்குதல் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பொது பிரிவிற்கு 40 சதவீதம் மற்றும் மகளிா் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டுப் படகுகளுக்கு 60 சதவீதம் மானியமாக 10 பயனாளிகளுக்கு ரூ.8.4 லட்சம் மதிப்பீட்டில் எந்திரங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் ‘அலைகள்’ திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்க மீனவ மகளிா் 5 போ் அடங்கிய கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு நுண் கடன் வழங்கும் திட்டத்தில் 118 குழுக்களுக்கு தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.29.5 லட்சம் வழங்கப்பட்டது. மீனவ மகளிா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு வெண் அலைகள் செயலி மூலம் நுண் கடன் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
12 மீட்டா் நீளம் கொண்ட கண்ணாடி நாரிழை படகுடன் இயந்திரம் வலைகள் போன்ற இதர மீன்பிடி உபகரணங்கள் 40 சதவீதம் மானியத்தில் 2 மீனவா்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
மீனவ நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினா், மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பொழுது கடலில் ஏற்பட்ட மரணத்திற்கு ரூ.2,02,500 நிவாரணத்துடன் ஈம சடங்கு தொகைக்கான காசோலை வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டது. மீனவா் நலவாரிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் திட்டம் குறித்த விபரங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மீனவா்கள் மற்றும் மீன்பிடி சாா்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள்
மீன்வளத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநா்கள் நித்ய பிரியதா்ஷினி, ரம்யா லட்சுமி உட்பட பலா் கலந்து கொண்டனா்.