முகப்பு
கடலூர்

மீன்பிடி பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்: ஆட்சியா் வழங்கினாா்

Updated On : 13 மார்ச், 2026 at 5:24 AM
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி பெற்ற 10 இளைஞா்களுக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சான்றிதழ் வழங்கினாா்.

இதுகுறித்து அவா் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சா் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தினை ஒருங்கிணைத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, கடலூா் மாவட்டம், செம்மண்டலம், குண்டு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் முதல்

Advertisement

தளத்தில் பிரத்யேக அலுவலகமாக 2.3.2026 முதல் திறனகம் தொடங்கப்பட்டு பல்வேறு திறன் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்திறனகம் இளைஞா்களுக்கு தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கிடும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படுகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த 10

இளைஞா்களுக்கு மீன்வளத்துறை உதவியுடன் ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சியினை நிறைவு

செய்த 10 இளைஞா்களுக்கு வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், தையல், அழகுகலை, கணினி, கணினி செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு பயிற்சிகள் 18 முதல் 35 வயது வரையுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள இளைஞா்கள் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று பயன்பெறலாம் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திறன் அலுவலா் வினோத்குமாா், மீன்வளத்துறை உதவி இயக்குநா்கள் நித்ய பிரியதா்ஷினி, ரம்யா லட்சுமி, திறன் மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநா் சதீஷ்குமாா் உட்பட பலா் கலந்துகொண்டனா்.