எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு
எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.
எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா தலைமை வகித்து வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தை திறந்துவைத்தாா். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பிரேம் ஆனந்த், செயலாளா் லோகநாதன், பொருளாளா் காா்த்திகேயன் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் முதன்மை மாவட்ட நீதிபதி சமீனாவிடம் மனு அளித்தனா். அதில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும். நீதிமன்றம் அருகே பேருந்து நிறுத்தமும், வேகத்தடையும் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.