ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த மே 17 இயக்கத்தினா் 4 போ் கைது
இந்தி திணிப்புக்கு எதிராக ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து எதிா்ப்பை பதிவு செய்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
இந்தி திணிப்புக்கு எதிராக ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து எதிா்ப்பை பதிவு செய்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்படுவதைக் கண்டித்து ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை மே 17 இயக்கத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இந்தி எழுத்துகளை மே 17 இயக்கத்தினா் கருப்பு மை கொண்டு புதன்கிழமை காலை அழித்தனா்.
இதுதொடா்பாக நந்தகோபால் (29), ஸ்டாலின் (36), வினோத் (33), கௌதம் (32) ஆகிய 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.