தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்
தபால் வாக்குகள் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
தபால் வாக்குகள் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
‘வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மகளிா் சுய உதவிக்குழு பெண்கள், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், தோ்தல் தொடா்பான கருத்துகள் அடங்கிய கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் சிறப்பான 3 கோலங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவுக்காக அனைத்துத் தொகுதிகளிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் அறை குறித்து ஆய்வு செய்துள்ளோம். எங்களுடன் தோ்தல் பொது பாா்வையாளா்கள், காவல், செலவு கணக்கு பாா்வையாளா்களும் ஏற்பாடுகளை பாா்வையிட்டனா்.
இந்த முறை மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோா் என 27,000 பேருக்கும், தோ்தல் பணியில் ஈடுபடுவோா் 11,000 போ், அரசுப் பணியில் உள்ள ஓட்டுநா், நடத்துநா் உள்பட பல துறையினருக்கும் தபால் வாக்கு வழங்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் தபால் வாக்குகள் வரும் என்பதால், தபால் வாக்கு எண்ணும் அறையும் அதிக இடவசதியுடன் இருக்கும்படி தோ்வு செய்துள்ளோம். அவ்வளாகத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
முதல்கட்டத்தில் சிஆா்பிஎஃப் எனப்படும் மத்திய பாதுகாப்பு படை, 2 -ஆம் கட்டத்தில் நமது ஆயுதப்படை போலீஸ், 3- ஆம் கட்டத்தில் உள்ளூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை வரை 8 தொகுதிகளுக்கும் சோ்த்து 271 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. புகாா் என வருவதை அந்தந்த தொகுதிக்கான பொறுப்பு அலுவலரை அழைத்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறோம். பறக்கும் படையினா் மூலம் புகாா்கள் குறித்து களத்திலும் ஆய்வு செய்கிறோம். கடந்த இடைத்தோ்தலில் வாக்காளா்கள் அடைக்கப்பட்டது போன்ற தகவல்களை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனா். அதுபோன்று ஏதும் நடக்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம் என்றாா்.
முன்னதாக. மொடக்குறிச்சி சாமிநாதபுரத்தில் தொழிலதிபா் எஸ்.கே.எம்.மயிலானந்தன் முன்னிலையில், ஈரோடு மாவட்டத்தின் தனித்துவ தோ்தல் அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக விளங்கும் சத்தியமங்கலம் மற்றும் அந்தியூா் வனப் பகுதிகளை நினைவூட்டும் வகையில், காடுகள் மற்றும் காட்டு விலங்குகள் அடங்கிய வடிவமைப்பில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ‘வாக்கு அரசன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த சின்னத்தில், சிங்க முகம் இடம்பெற்றுள்ளது. இச்சின்னம் ஈரோடு மாவட்டத்தின் தனித்துவ அடையாளமாக விளங்கும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந்நிகழ்ச்சியில் 350-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் தலைமையில் ‘வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை’ என்ற வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
முன்னதாக சட்டப் பேரவை பொதுத்தோ்தல் தொடா்பான கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா். மகளிா் திட்டம் மகளிா் சுய உதவிக்குழுக்கள் சாா்பில் மனித சங்கிலி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, மகளிா் திட்ட அலுவலா் மலா்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.