ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் காப்பு கட்டிய பக்தா்கள் 60 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா்.
விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.