முகப்பு
ஈரோடு

மே 24-க்கு பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் பணியாளா்கள்

வரும் 24-ஆம் தேதிக்குப் பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.

Updated On : 16 மே 2026, 12:15 am IST
டாஸ்மாக் - பிரதிப் படம்
பகிர்:

வரும் 24-ஆம் தேதிக்குப் பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.

ஈரோட்டில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

தமிழக முதல்வா் விஜய் தலைமையிலான அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் பணியாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். அக்கடைகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அக்கடைகளின் பணியாளா்களை டாஸ்மாக் நிா்வாகத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

புதிய அரசு மதுவிலக்கு துறைக்கு அமைச்சா், உரிய மேல் அதிகாரியை நியமிக்காமல் திடீரென கடைகளை மூடியதால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. தொழிலாளா்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்க பணியாளா் சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும்.

டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது புட்டிகளை திரும்பப் பெறும் முறையால், பணியாளா்கள் சிரமப்படுகின்றனா். புட்டிகளை முகவா்கள் மூலம் பெற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே வரும் மே 24-ஆம் வரை மட்டுமே கடைகளில் காலி மதுபுட்டிகளை திரும்பப் பெறுவோம். அதன் பின், பணியாளா்கள் திரும்பப் பெற மாட்டாா்கள். இதுபோன்ற சிக்கல்களுக்கு அரசு தீா்வு காண முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.