நீலகிரி

சந்தனக் கட்டை பதுக்கியவர் தப்பியோட்டம்

DIN

கூடலூரில் சந்தனக் கட்டை பதுக்கியவர் வெள்ளிக்கிழமை தப்பியோடினார்.
 கூடலூர் பகுதியிலுள்ள அத்திப்பாளியில் சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வன அலுவலர் திலீப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கூடலூர், சேரம்பாடி வனச் சரகர்களை உள்ளடக்கிய தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். அத்திப்பாளி பகுதியல் சந்தனக் கட்டை பதுக்கியிருக்கும் வீட்டை வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்தபோது வீட்டின் உரிமையாளர் தப்பியோடிவிட்டார்.
 வீட்டில் சோதனையிட்டபோது 40 கிலோ சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வனத் துறையினர் சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: காவல்துறை காவலில் குற்றவாளி பலி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

SCROLL FOR NEXT