உதகையில் வரும் 18-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இடுபொருள்கள், நீர்ப்பாசனம் உள்ளிட்டவை தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72, உதகை-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.