நீலகிரி

குரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

DIN

குரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த  2 பேருக்கு வியாழக்கிழமை தலா ரூ.  25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் வனச் சரகத்திலுள்ள புளியம்பாறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரியவகையான குறைக்கும் மானின் இறைச்சி வைத்திருப்பதாக வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடலூர் வனச்சரக அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனவர் ரவிக்குமார்,  வனக் காவலர்கள் சங்கர்,  பிரவீண் ஆகியோர் புளியம்பாறை பகுதியிலுள்ள அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது அங்கு, குரைக்கும் மானின் இறைச்சி  2 கிலோ இருந்தது தெரியவந்தது.
 இதையடுத்து இறைச்சியைக் கைப்பற்றிய வனத் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜன் (28), ராஜன் (42)ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT