நீலகிரி

சக்தி மலையில் தைப்பூசத் தேர்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

DIN

கோத்தகிரி சக்திமலை முருகன் கோயில்  ஜனவரி மாதம் தைப்பூச தேர்த் திருவிழா மற்றும் சுப்பிரமணியர் வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்துவது  குறித்த ஆலோசனைக்  கூட்டம் ஸ்ரீ சக்தி சேவா சங்கம் சார்பில் சக்திமலை முருகன் கோயில் வளாகத்தில்  செவ்வாய்க்   கிழமை  நடைபெற்றது.
     கூட்டத்திற்கு சக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசந்திர ரெட்டி முன்னிலை வகித்தார். ஜெயக்குமார், ராஜேஷ்சந்தர், நடராஜ் முன்னிலை வகித்தனர். 
இதில் சக்தி சேவா சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடுவது எனவும், பக்தர்களின் வசதிக்காக குடிநீர், நீர்மோர் பந்தல் அமைக்கவும், பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு மூலம் அன்னதானம் வழங்கவும், தேர் அலங்காரம், வரவேற்பு, ஆன்மிகச் சொற்பொழிவு, சிறப்புப் பூஜைக்கு தனி வழி என ஒவ்வொரு நிகழ்வும் சிறப்பாக நடைபெற குழுக்கள் அமைக்கப்பட்டன. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT