நீலகிரி

550 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் அளிப்பு

DIN

கூடலூர் அடுத்துள்ள ஓவேலி மற்றும் புளியம்பாறை பகுதியில் 550 மாணவ, மாணவிகளுக்கு இலவசச் சீருடைகள் ரெப்கோ வங்கி சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஓவேலி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி,புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பள்ளிச் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ரெப்கோ வங்கி மேலாளர் கணேசன் தலைமை வகித்தார்.
ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென் இந்தியத் தலைவர் சு.ஆனந்தராஜா,பேரவைப் பிரதிநிதிகள் வேலு ராஜேந்திரன்,பரமசிவம் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் வங்கி ஊழியர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT