நீலகிரி

நட்சத்திர ஆமை கடத்தியவருக்கு 9 மாதம் சிறை

DIN

நீலகிரி வடக்கு வனக் கோட்டத்தில் தெங்குமரஹாடா பகுதியில் நட்சத்திர ஆமைகளைக் கடத்தியவருக்கு  9 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா பகுதியைச் சேர்ந்தவர் பண்டன் (47).  பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் மீது, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தெங்குமரஹாடா பகுதியில் நட்சத்திர ஆமைகளைக் கடத்தியதாக  வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.  இவ் வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை  நடைபெற்றது.  இதில் பண்டனுக்கு 9 மாத சிறை த் தண்டனை விதித்து கோத்தகிரி நீதித்துறை நடுவர்  ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT