மஞ்சூர் அருகே மேல்குந்தா ஊராட்சிக்கு உள்பட்ட இரியசீகை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, குந்தா வட்டாட்சியர் சாந்தினி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் காயத்ரி, சமூகப் பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இரியசீகை, ஜே.ஜே நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குந்தா வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.