பள்ளி மாணவர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர் இலவச சட்டப் பணிகள் குழு, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமுக்கு கூடுதல் நீதிபதி சரவணன் தலைமை வகித்து இலவச சட்ட ஆலசனை பெறுவது குறித்தும், சட்ட ஆணைக் குழுவை அணுகுவது குறித்தும் விளக்கமளித்தார்.
வழக்குரைஞர் மலைசாமி, அலுவசலர் மகேஷ்வரன், ஆசியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் ராபர்ட் வரவேற்றார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.