கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியை முற்றுகையிடுவதற்காக முதுமலை தெப்பக்காட்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.