நீலகிரி

ரெப்கோ வங்கி சார்பில் 89 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம்

DIN

பந்தலூரில் ரெப்கோ வங்கி சார்பில் 89 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் பந்தலூர் பகுதியிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட 89 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெப்கோ வங்கியின் இயக்குநர்கள் எல்.முனீஸ்வர் கணேசன், பி.மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜா, பேரவைப் பிரதிநிதிகள் வேலூ ராஜேந்திரன், கிருஷ்ண பாரதி, லோகநாதன், ரெப்கோ வங்கி மேலாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT