பந்தலூரில் ரெப்கோ வங்கி சார்பில் 89 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் பந்தலூர் பகுதியிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட 89 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெப்கோ வங்கியின் இயக்குநர்கள் எல்.முனீஸ்வர் கணேசன், பி.மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜா, பேரவைப் பிரதிநிதிகள் வேலூ ராஜேந்திரன், கிருஷ்ண பாரதி, லோகநாதன், ரெப்கோ வங்கி மேலாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.