நீலகிரி

கோத்தகிரி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்

DIN


கோத்தகிரி அருகே கடைகம்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டிசாராள் மற்றும் தணிக்கை அதிகாரி சசி, நெடுகுளா ஊராட்சி செயலாளர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட கடைகம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து நடப்பாண்டின் சமூக தணிக்கை அறிக்கையை தயாரித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தினர். இதில்நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT