நீலகிரி

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 11 ஆயிரம் அபராதம்

DIN

கோத்திகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்,  கடை உரிமையாளர்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
கோத்தகிரி, கட்டபெட்டு பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. 
இதைத் தொடர்ந்து மாவட்ட  ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) குணசேகரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கட்டபெட்டு பஜார் பகுதியில் உள்ள கடைகளில்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, 12 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது.  
இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு, ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT