நீலகிரி

கூடலூரில் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் தொடக்கம்

DIN

கூடலூரில் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கத் தொடங்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலமாக முதல்கட்டமாக விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து நிர்வகிக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக இந்தப் பகுதி விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் இல்லாமல் சங்கம் நேரடியாகக் கொள்முதல் செய்து நல்ல விலை கொடுக்கும் முயற்சியை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்புக்குட்டிப் பேட்டையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கனரா வங்கி மேலாளர் கே.வி.ஸ்ரீதரன் சங்க அலுவலகத்தைத்  திறந்து வைத்தார். விழாவுக்கு சளிவயல் ஷாஜி தலைமை வகித்தார். முருகன்,ஷாமலேஷன், பால்ஜோஸ், பங்குத் தந்தை வினோய், கே.பி.முகமது, முகமது கனி, விவசாயிகள், வணிகர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT