உதகை கோடை சீசன்: ஜூன் 15 வரை படப்பிடிப்புகளுக்குத் தடை
உதகையில் கோடை சீசன் தொடங்கவுள்ளதையடுத்து அரசினர் தாவரவியல் பூங்காவில் வியாழக்கிழமை (மார்ச் 29) முதல் ஜூன் 15ஆம் தேதி வரை
உதகையில் கோடை சீசன் தொடங்கவுள்ளதையடுத்து அரசினர் தாவரவியல் பூங்காவில் வியாழக்கிழமை (மார்ச் 29) முதல் ஜூன் 15ஆம் தேதி வரை திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் கூடுதல் வருகையைக் கருத்தில் கொண்டும், பூங்காவுக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தாவரவியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.