கோத்தகிரியில் பலாப் பழ சீசன் தொடக்கம்: யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளதால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளதால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் மாமரம் குஞ்சப்பனை மற்றும் முள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே பலா மரங்கள் நிறைந்துள்ளன. தற்போது பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளதால் இதை உண்பதற்காக சமவெளிப் பகுதியை ஒட்டிய வனப் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைகளில் யானைகள் கூட்டமாக அடிக்கடி உலவி வருகின்றன.
பகல் மற்றும் மாலை நேரங்களில் சாலையில் நீண்ட நேரம் யானைகள் நின்று விடுவதால், வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் பயணிக்கின்றனர். இவர்களை வாகனங்களில் இருந்து இறங்க வேண்டாம் என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.