குன்னூர் வண்ணார்பேட்டை பகுதியில் தந்தை பெரியார் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு செவ்வாய்க்கிழமை நகராட்சி மூலமாக அகற்றப்பட்டன.
குன்னூர் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள தந்தைப் பெரியார் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல்
கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின்பேரில் வண்ணார்பேட்டைப் பகுதிக்குச் சென்ற நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புக் கட்டடத்தை அகற்றினர்.