நீலகிரி

மாணவிக்கு பாலியல் தொல்லை: பக்கத்து வீட்டு இளைஞர் கைது

DIN

பழைய உதகைப் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பழைய உதகைப் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (40). இவரது பக்கத்து வீட்டில் 15 வயதான பள்ளி மாணவி தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவியின் தந்தை சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.  பக்கத்து வீடு என்பதால் பாலசுப்பிரமணி அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்து செல்வாராம்.
இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தபோது சென்ற பாலசுப்பிரமணி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்து அந்த மாணவி சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற சைல்டு லைன் அமைப்பினர் மாணவியை மீட்டனர். 
பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தனர். 
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை பாலசுப்பிரமணியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT