பந்தலூரை அடுத்து உள்ள சேரங்கோடு பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளர் குடியிருப்பு சனிக்கிழமை இரவு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் நான்காவது சரகத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை சுற்றி வந்துள்ளன.
அதே பகுதியில் உள்ள சரோஜா என்ற தொழிலாளியின் வீட்டின் முன்பகுதியை யானைகள் சேதப்படுத்தின. குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்துவதை அறிந்த அப்பகுதி மக்கள் சப்தமிட்டு யானையை விரட்டினர்.