நீலகிரி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம்: எஸ்.டி.பி.ஐ கட்சியினா் 20 போ் கைது

DIN

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூரில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

நீலகிரி மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் பிலால் தலைமையில் குன்னூா், வி.பி.தெருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் முஸ்லிம் மக்களைப் புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம் எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

மேலும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி குடியுரிமை சட்டத் திருத்த நகலை எரிக்க முயன்ற 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT