நீலகிரி

மக்களவைத் தேர்தல்: காவல் துறை அதிகாரிகள் 25 பேர் பணியிட மாற்றம்

DIN

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில்  காவல் துறை அதிகாரிகள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
  இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:  வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகள் பணியாற்றி வருவோரும், இம்மாவட்டத்தை சொந்த மாவட்டமாகக் கொண்டோருமான காவல் துறை அதிகாரிகள் 25 பேர் இது வரையிலும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பணியிட மாற்றம் பெறுவோரின் எண்ணிக்கை  மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
 பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் விவரம்...: உதகை நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமேனி, காவல் ஆய்வாளர்கள் விநாயகம், முரளி, சுரேஷ், பிரவீணா, பாலசுந்தரம், 14 காவல் உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT