சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு, குன்னூர் அருகில் உள்ள பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
கல்லூரியின் தேசிய மாணவர் படை, பொருளியல் துறையுடன் இணைந்து "நீரின்றி அமையாது உலகு" என்ற தலைப்பில் இந்த ஊர்வலத்தை நடத்தின.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் சூரியகுமார், கலந்து கொண்டு நீரின் இன்றியமையாமை, பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி குறித்து விளக்கமளித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியை சிந்தியா ஜார்ஜ், ஜே.சி.ஐ, தேசிய மாணவர் படையினர் இணைந்து செய்திருந்தனர்.