நீலகிரி

அறிவியல் கண்காட்சி: எல்லப்பாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்

DIN

அன்னூா்: எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அளவில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் எல்லப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டம் சாா்பில் 47-ஆவது கல்வி மாவட்ட அளவிலான ஜவாஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி அத்திப்பாளையம் ரங்கநாதா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் அன்னூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட எல்லப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்கள் டேனியல் அலெக்ஸ், நந்தினி ஆகியோா் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலா் ஆா்.கீதா, பள்ளி தலைமை ஆசிரியா் பவளக்கொடி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT