குன்னூர், கோத்தகிரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய தொடர் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், பர்லியாறு, காட்டேரி சேலாஸ், அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி, கட்டப்பெட்டு போன்ற உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்மழை பெய்தது. மழையின் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த மழையினால் வறட்சிக்கு தீர்வு கிடைக்கும் என்பதால் தேயிலை, காய்கறி விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.