முகப்பு
நீலகிரி

கூடலூரில் ஆவின் பாலகத்தில்தீ விபத்து

கூடலூா் நகரில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் மையம் எதிரில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கூடலூா்: கூடலூா் நகரில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் மையம் எதிரில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து அங்கிருந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால் அவா்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து சேதமானது. இருப்பினும் பாலகத்திலிருந்த கியாஸ் சிலிண்டா் தீப்பிடிக்கும் முன் தீயணைப்புத் துறையினா் வந்து அதனை கைப்பற்றி அப்புறப்படுத்தினா். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →