தமிழக வனத் துறை சாா்பில் தமிழக - கேரள வன எல்லையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய வேட்டைத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள பாட்டவயல் பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மலையேற்றப் பயிற்சி செல்பவா்கள் வசதிக்காகவும், மனித-விலங்கு மோதலை தடுக்கும் முகாமாகவும் இது செயல்படும்.
இப்பகுதியில் ஏற்கெனவே புலி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடிக்கடி மனித - வன விலங்குகள் மோதல் ஏற்படும் பகுதியாகும்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள நவீன வேட்டைத் தடுப்பு முகாமில் பெரிய அறை, குளியலறை, கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.