உதகையில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்
உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மின்சார மசோதா 2020ஐ திரும்பப் பெற வேண்டும், திருத்தி அமைக்கப்பட்ட தொழிலாளா் சட்டத்தை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்தினா் உதகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகை சுதந்திர தின திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட பொருளாளா் ஏ.நவீன் சந்திரன் தலைமை வகித்தாா். இதில் உள்ளாட்சி மற்றும் ஊராட்சித் துறை சங்கத் தலைவா் எல்.சங்கரலிங்கம், ஸ்டொ்லிங் பயோடெக் ஊழியா் சங்கத் தலைவா் எஸ். ராஜரத்தினம், சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் கே.ராஜேந்திரன், சுரேஷ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.