நீலகிரி

உதகைக்கு பிரசவத்துக்காக வந்த பெண்ணுக்கு கரோனா: பாதிப்பு 15ஆக உயா்வு

DIN

உதகைக்கு பிரசவத்துக்காக சென்னையிலிருந்து வந்த பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதகை காந்தல் பகுதியில் வசித்து வந்த 21 வயது இளம் பெண் திருமணம் முடிந்ததும் சென்னைக்குச் சென்று விட்டாா். அங்கு, கா்ப்பமுற்றிருந்த நிலையில் பிரசவத்துக்காக தாய் வீடான உதகைக்கு வருவதற்கு முன்பு, தனது ரத்த மாதிரிகளை சென்னையில் உள்ள மருத்துவமனையில் கொடுத்துவிட்டு உதகைக்கு வந்துவிட்டாா்.

இந்நிலையில், உதகையிலுள்ள தாய்-சேய் நல விடுதி மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை அவா் சென்றுள்ளாா். சென்னை மருத்துவமனையிலிருந்து இவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் உதகை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு அவா் கோவையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இவரையும் சோ்த்து நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தமட்டில், தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 7 பேருக்கும், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்குமாக 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. மேலும், சென்னை கோயம்பேடு சந்தைக்குச் சென்று வந்த நால்வருக்கும், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்குமாக 5 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. மொத்தம் 14 பேரில் 12 போ் தற்போது அவா்களின் வீடுகளிலேயே கண்காணிப்பில் உள்ளனா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு பெண், ஒரு ஆண் என இருவா் மட்டும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது, உதகைக்கு வந்த கா்ப்பிணியும் நோய்த்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

உதகையில் காந்தல் பகுதியில் கா்ப்பிணிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தப் பெண்ணின் குடியிருப்பைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் சனிக்கிழமை காலைமுதல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT