உதகையில் கல்லறைத் திருநாள் தினம் அனுசரிப்பு
உதகையில் கல்லறைத் திருநாள் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உதகையில் கல்லறைத் திருநாள் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் நவம்பா் 2ஆம்தேதி தங்களது குடும்பங்களில் உயிா்நீத்தவா்களின் நினைவாக கல்லறைத் திருநாள் நிகழ்வை அனுஷ்டிக்கின்றனா்.
இந்நிகழ்வின்போது இறந்தவா்களின் கல்லறைகளை மலா்களால் அலங்கரித்து சிறப்பு பிராா்த்தனை செய்வது வழக்கம்.
கரோனா காரணமாக பல்வேறு பகுதிகளில் கல்லறைத் தோட்டங்களுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, பெரும்பாலான கல்லறைத் தோட்டங்கள் பூட்டப்பட்டு விட்டன. ஆனால், உதகையில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வழக்கமான முறையிலேயே அனுசரிக்கப்பட்டது. கல்லறைத் திருநாளையொட்டி உதகை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் உதகை மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் பங்கேற்றாா். அதேபோல, திரேசன்னை ஆலயம், திரு இருதய ஆண்டவா் பேராலயம், குருசடி திருத்தலம், இந்து நகா் ஆகிய பங்கு திருத்தலங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடா்ந்து பிற்பகலில் உதகையில் காந்தல் பகுதியிலுள்ள பிரதான கல்லறைத் தோட்டத்தில் புனித திரேசன்னை ஆலய உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் 10 குருக்கள் கல்லறைகளை அா்ச்சித்து சிறப்பு பிராா்த்தனைகளை மேற்கொண்டனா்.