நீலகிரி

குன்னூரில் பனிமூட்டம் காரணமாகபோக்குவரத்து பாதிப்பு

DIN

நீலகிரி மாவட்டம் , குன்னூா் , அதன் சுற்று   வட்டாரப்  பகுதிகளில்  மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடன்   வாகனங்களை  மெதுவாக இயக்கினா். இதனால், போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில்  கடந்த சில நாள்களாக   இரவு நேரத்தில் பரவலாக  மழை பெய்தது. 

வெள்ளிக்கிழமை காலை முதல் லேசான சாரல் மழை பெய்த நிலையில், குன்னூா்,  அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்  குளிருடன்,   பனிமூட்டமும்   அதிகரித்துக் காணப்பட்டது.  

மூடுபனி காரணமாக எதிரே  வரும் வாகனங்கள்  சரிவர  தெரியாததால் வாகன ஓட்டிகள்   முகப்பு விளக்குகளுடன் மலைப் பாதையில்  வாகனங்ளை இயக்க  காவல்  துறையினா்  வலியுறுத்தியுள்ளனா் . இருப்பினும்  அடா்ந்த மேகமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT