நீலகிரி

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் பெண் புலி உயிரிழப்பு

DIN

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனக் கோட்டத்தில் சீமாா்குழி பகுதியில் இறந்த நிலையில் புலியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

சீமாா்குழி ஓடைப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பாா்த்துள்ளனா். சுமாா் 7 வயதான இந்த பெண் புலியின் நகங்கள் மற்றும் பற்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன.

இறந்த புலியின் உடல் சனிக்கிழமை காலை பிரேதப் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT