நீலகிரி

வண்டலூர் வரும் இரு புலிக் குட்டிகள்

DIN

சிங்காரா வனக் கோட்டத்தில் புலியின் சடலத்தின் அருகிலிருந்து மீட்கப்பட்ட 2 ஆண் புலிக்குட்டிகள் வண்டலூர் கொண்டு செல்லப்பட்டன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆச்சக்கரை வனப்பகுதியில் சீமார்குழி என்ற இடத்தில் இறந்த பெண் புலியின் சடலத்தின் அருகிலிருந்து மீட்கப்பட்ட பிறந்து மூன்று வார வயதான இரண்டு ஆண் புலிக்குட்டிகளும் தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த இரண்டு நாள்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே தேசிய புலிகள் ஆணைய உயர் அலுவலர்கள் மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு புலிகள் குட்டிகளையும் வண்டலூர் உயிரியல் பூங்கா கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. 

இதையடுத்து இரண்டு புலிக்குட்டிகளும் இன்று காலை வண்டலூருக்கு கொண்டு செல்லப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT